கிளிநொச்சியில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 6,256 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி உள்ளது என மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6,256 பேர் தொற்றுக்கிள்ளாகி இருப்பதுடன், இதில் 537 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், இதுவரை 73 மரணங்கள் பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், முதலாவது தடுப்பூசியை 61, 894 பேர் பெற்றுள்ளனர் எனவும், இரண்டு தடுப்பூசிகளையும் 43, 507 பேர் பெற்றுக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதில், இதுவரை 107 பேர் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *