தண்டனையைக் குறைக்குமாறு கூரையில் ஏறி கைதிகள் போராட்டம்!

தண்டனையைக் குறைக்குமாறு கூரையில் ஏறி கைதிகள் போராட்டம்!

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் தண்டனையைக் குறைக்குமாறு கோரி ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை சுமார் 10 கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தமது தண்டனையைக் குறைக்குமாறு கோரி சிறைச்சாலை கூரையில் ஏறி கைதிகளால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கைதிகளின் கோரிக்கைக்கு சாதகமான தீர்வை வழங்கத் தமது திணைக்களத்திற்கு இயலாதெனவும் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகசிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *