
கொழும்பு, ஏப் 24
நாட்டில் அரசியல் ஸ்தீரதன்மையை உறுதி செய்யாமல் ஏனைய பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வுகளை முன்வைக்க முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தளம்பல் நிலைமைக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை நோக்கி செல்வது அனுபவமற்ற தன்மையினை எடுத்துணத்துவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளதார நெருக்கடிக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ஊழலுக்கு எதிராக பக்கசார்பற்ற நடவடிக்கை, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை மீளவும் அமுல்படுத்தல், 21 ஆவது அரசியலமைப்பு திருத்தினை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளல், மற்றும் தேசிய மற்றும் சர்வதேச கடன்களை மறுசீரமைப்பு செய்தல் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.