ஐரோப்பிய ஆணைய தலைவரின் இந்திய பயணம்

புதுடெல்லி,ஏப் 24

ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஏப்ரல் 24, 25ம் தேதிகளில் இந்தியா வருகிறார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியா வந்துள்ள உர்சுலா வொன் டெர் லியென் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *