என்னை பதவி விலகுமாறு கூறுவது முறையற்றது – மஹிந்த

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக தன்னை பதவி விலகுமாறு கூறுவது முறையற்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கு தானே தலைவராக இருப்பேன் என அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தான் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக இருக்க தயாராக இருப்பதாக தெரிவித்த பிரதமர், தன்னை பதவி விலகச் சொல்வது முறையற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஒரு வருட காலத்திற்கு அனைத்து கட்சிகளின் இடைக்கால அரசாங்க பிரதிநிதித்துவத்தை அமைப்பதற்காக பிரதமர் உட்பட முழு அமைச்சரவையையும் இராஜினாமா செய்யுமாறு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரியதையடுத்து, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *