சட்ட விரோதமாக இந்தியா செல்ல முயன்ற 7 பேர் கைது

கொழும்பு, ஏப் 24

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக இலங்கையில் வசிக்க முடியாத நிலையில் இந்தியா தப்பி செல்வதற்காக முயற்சித்த இரு குடும்பங்களை சேர்ந்த 7 நபர்கள் சனிக்கிழமை பேசாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெரியவர்களும் நான்கு குழந்தைகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸாரால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த மன்னார் நீதாவான் நீதிமன்ற நீதிபதி A.H.ஹைபதுல்லா இரு பெண் ஒரு ஆண் உட்பட மூன்று பெரியவர்களுக்கும் தலா 50,000 ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்ததுடன், நான்கு பிள்ளைகளையும் பெற்றோர்களுடன் சேர்ப்பதற்கும் அனுமதி வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *