(க.விஜயரெத்தினம்)
துறைநீலாவணை கிராமத்தை சேர்ந்த சேர்ந்த ஆசிரியரும், ஊடகவியலாளருமான  பாக்கியராசா மோகனதாஸ்  கடந்த சனிக்கிழமை(23)இறைபதம் எய்தினார்.

அன்னார் பாக்கிராசா சிவராணி தம்பதிகளின் மூத்த புதல்வராக திகழ்ந்தார்.இறக்கும்போது அவருக்கு 34 வயதாகும்.சம்மாந்துறை மத்தியகல்லூரியின்(தேசிய பாடசாலை) ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.திருமணமாகாத இவர் இளவயதில் ஊடகத்துறையில் ஆயிரக்கணக்கான செய்திகள்,கட்டுரைகளை எழுதி பல தடங்களை பதிவு செய்துள்ளார்.

இளம் ஊடகவியலாளரான இவர் குறுகிய காலத்தினுள் வீரகேசரியின் களுவாஞ்சிகுடி நிருபராகவும்,தினகரன் பத்திரிகையின் மண்டூர் குறுப், தமிழன் பத்திரிகையின் வீரமுனை நிருபராக தனது ஊடகப் பயணத்தினை ஆரம்பித்த இவர் இலங்கையில் வெளிவருகின்ற பிரபல நாளிதழ்களில் பல வருட காலமாக கட்டுரைகள், அரசியல் வாதிகளின் பேட்டிகள்,கலைஞர்களின் படைப்புக்கள் என பல்வேறு விடயங்களை வெளிக்கொண்டு வந்த பல்துறைக் கலைஞரான இவருக்கு பல வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்  இளம் கலைஞர் விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.துறைநீலாவணை தேசிய பாடசாலை,கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற்கலை நிறுவனத்தின் பழைய மாணவருமாவார்.

இவர் கிழக்கு மாகாணத்தில் உள்ள 74 கலைஞர்கள்,படைப்பாளிகளை நேர்காணல் செய்து  படைப்பாக்கல் ஆளுமைகள் எனும் நூலை திருகோணமலையில் வைத்து கடந்தமாதம் வெளியீட்டு வைத்தார்.

சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.அன்னாரின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை துறைநீலாவணை பொது மயானத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *