
கடந்த சில தினங்களுக்கு முன் ரம்புக்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயன்ற குற்றச்சாட்டில் 27 வயதான இளைஞர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
இந் நிலையில் சந்தேகநபரை இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, தலா 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.