புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்பும் தொகை அதிகரிப்பு!

இலங்கைக்கான வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் 2022 மார்ச் மாதத்தில் சிறிய அதிகரிப்பு கண்டுள்ளது.

பெப்ரவரியில் 205 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கை தொழிலாளர்களின் பணம் மார்ச் மாதத்தில் 318 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

மார்ச் 2021 இல் இலங்கை பெற்ற 612 மில்லியன் அமெரிக்க டொலர்களை விட இந்த தொகை இன்னும் குறைவாகவே உள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து இலங்கை நாணயத்தை மிதக்க மத்திய வங்கி முடிவு செய்ததை அடுத்து இந்த சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *