கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்பாக நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இரண்டு வாரங்களை கடந்த நிலையில் பேரெழுச்சியுடன் தொடர்கிறது.
இந்நிலையில் தன்னெழுச்சியாக நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு பலதரப்பட்ட மக்களும் தங்களுடைய ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்றையதினம் மாலை 6மணிக்கு காலிமுகத்திடலில் கோட்டாவிகன் அதிகாரத்திற்கு எதிராக பறையடிப்போம் வாரீர் எனும் தொனிப்பொருளில் பறையடித்து தமது எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளனர்.
பறையடிக்கும் நிகழ்வு 5 மணிக்கு செட்டியார் தெருவில் இருந்து ஆரம்பமாகி காலிமுகத்திடலை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
