வர்த்தக நிலையத்திற்குள் பெண்ணுக்கு நடந்த அவலம் – வவுனியாவில் பரபரப்பு

வவுனியாவில் பட்டப்பகலில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த திருடர்களால் பெண் ஒருவரின் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர், அங்கு நின்ற பெண்ணை அழைத்து, வர்த்தக நிலையத்திற்குள் வைத்து ஒருவருடைய முகவரியை விசாரிப்பது போல் விசாரித்து கொண்டிருந்த போது, குறித்த பெண் அணிந்திருந்த இரண்டரை பவுண் தங்கச் சங்கிலியை அறுத்து கொண்டு தப்பியோடி, வீதியில் குறித்த இளைஞருடன் கூட வந்தவர் தயார் நிலையில் வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *