நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான நிலையை கண்டித்து பல இடங்களில் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இந் நிலையில், கடந்த வாரம் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த நிலையை எவ்வாறு கையாள்வது மற்றும் குழு அமைப்பது தொடர்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்கள்.
இதனை அடுத்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இரண்டாம் கட்ட கலந்துரையாடல் நடைபெறுகிறது.
இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
