
மாற்றத்தை நோக்கி பயணிக்க அணிதிரளுங்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சரது முகப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எம் தமிழ் இளையோரே விழித்தெழுவீர்!,…
அன்பு நிறைந்த ஆற்றல் மிகு இளையோரே உங்களுக்கு வணக்கம்!,..
உங்கள் வாழ்வும் வளமும்,. தமிழர் தேசத்தின் தலை நிமிர்வும், இன சமூக சமத்துவ நீதியுமே என்றும் எம் கனவு,…
எங்கள் கனவும் உங்கள் கனவும்ஒன்றென நீங்கள் கருதி இன்றே நீங்கள் விழித்தெழுந்தால் அந்த நெடுங்கனவு விரைவில் நிஜமாகும்,..
நடந்து முடிந்த அழிவு யுத்த வன்முறைகளின் வடுக்கள் இன்னும் முற்றாக தீராதிருக்க,..
வடிந்தோடிய குருதியின் ஈரம் எமது மண்ணில் இன்னும் காயாதிருக்க,..
மறுபடியும் இன்னொரு வன்முறை களம் நோக்கி உங்களை உசுப்பேற்ற நினைப்போரின்போலி முகங்களை நீங்கள் புரிந்து கொண்டு விழிப்படைய தயாராகுங்கள்,.இலங்கைத்தீவின் இன்றைய இடர் காலச்சூழல் எமக்கு ஆழ்ந்த துயரத்தை தருகிறது,..
ஆனாலும்,. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்போருக்கு சகல மக்களும் இன்று எதிர் கொள்ளும் இடர் கால சூழலே பெரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நாம் மக்களின் அவலங்களை தீர்ப்பதில்,.. அதில் முன்னோக்கிய மாற்றங்களை உருவாக்குவதில் மகிழ்ச்சி காண விரும்புகிறோம்.
தீர வேண்டிய பிரச்சினையை தீரா பிரச்சினையாக்கி அதில் குளிர் காய்ந்து குழப்பங்களை விளைவிப்போருக்குமக்களின் அவலங்களே குதூகல மகிழ்ச்சி. அவலங்களை தீர விடாது தடுத்து வைத்து அவர்கள் அடுத்த தேர்தல் வெற்றி குறித்து கனவு காண்கிறார்கள்,..
அவலங்களை தீர்த்து வைத்து, நாம் மக்களின் மாற்றத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறோம்,.. எங்காவது ஓரிடத்தில் ஏதாவது ஒன்று பற்றி எரிகின்றது என்றால்,..அதில் அவர்கள் எண்ணை ஊற்றி பற்றி எரிய வைக்கிறார்கள்.ஆனால்,.. நாம் எரிகின்ற இடத்தில் தண்ணீரை ஊற்றி எரியும் நெருப்பை நிரந்தரமாக அணைய வைக்க விரும்புகிறோம்.
இதுவே எமக்கும் ஏனைய சுயலாப தமிழ் அரசியல் கட்சி தலைமைகளுக்கும் இருக்கும் வேறுபாடு,ஆளும் கட்சி, எதிர்க்கட்சி,.. இரண்டிற்கும் இடையிலான வழமையான போட்டி அரசியல் பிரச்சினைகள் வேறு,.அவலங்களில் இருந்து மீண்டெழுந்து தத்தமது சமாதான மகிழ் வாழ்வைதீர்மானிக்க விரும்பும் மக்களின்பிரச்சினைகள் வேறு,..
எம்மினிய தமிழ் இளையோர்களே!… அவர் சொன்னார், இவர் சொன்னார்,.. என்ற போதை மயக்கங்களை கேட்டு நீங்கள் இனியும் மதி மயங்கி செல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.
அழிவாயுதங்கள் இன்றி அறிவாயுதம் ஏந்துங்கள் என நான் அன்றே அழிவு யுத்த காலத்திலும் கூட விடுத்த பகிரங்க அறைகூவலையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்,..எனது தீர்க்க தரிசன தொலை தூரபார்வையே வென்றது,.இன்றும் சொல்கிறேன்,.
நான் கூறும் மதிநுட்ப அரசியல் யதார்த்த வழிமுறையே இனியும் வெல்லும்,..அறை கூவி உங்களை அழைக்கிறேன்.இன்றுள்ள இடர்கால சூழலையும் மாற்றியமைத்து, முயல்வோம்,. வெல்வோம்,.
நிமிர்வோம்,…வாருங்கள் என உங்களிடம் அறை கூவல் விடுக்கிறேன். எமது பாதையில் இலட்சிய கனவுகளை நோக்கிய வெற்றிகள் நிச்சயம் கிடைக்கும்,..
இதுவரை சாதித்து காட்டிய எங்கள் கரங்களுக்குநீங்கள் பலம் சேர்த்தால்,..இன்னும் எட்ட வேண்டிய இலக்குகள் அனைத்தையும் விரைவாக எட்டிவிட முடியும்,..மாற்றத்தை நோக்கி பயணிக்க அணிதிரளுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.