தம்பலகாமத்தில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டம்

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி திருகோணமலை – தம்பலகாமம் சிவில் சமுகத்தினரால் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமானது, தம்பலகாமம் சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு கிண்ணியா வீதியில் நடை பவணியாக இன்று காலை இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பல மக்கள் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்தனர்.

கோட்டா கோ கோம், போன்ற பதாகைகளை ஏந்தியும் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

அத்தியவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு பொருட்களின் தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *