உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில் எட்டு பேர் உயிரிழப்பு

உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யாவின் ஷெல் குண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதோடு இருவர் காயமடைந்துள்ளதாக பிராந்திய தலைவர் தெரிவித்தார்.

ஹிர்ஸ்கே மற்றும் ஸோலோட் நகரங்கள் குண்டுவீசித் தாக்கப்பட்டதில் ஆறு பேர் இறந்ததாக டெலிகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லுஹான்ஸ்க் மற்றும் அண்டை டொனெட்ஸ்க் பகுதிகளைக் கைப்பற்றுவதில் தனது இராணுவ நடவடிக்கையில் கவனம் செலுத்துவதாக ரஷ்யா கூறியுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், தலைநகர் கீவ் உட்பட வடக்கு உக்ரைனைக் கைப்பற்றத் தவறிய பின்னர், ரஷ்யா இதனை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *