போராட்டங்களுக்கு நடுவே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை.

அரசாங்கத்தினை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த பல வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன் நடைபெற்றுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இரு வாரங்களை கடந்தும் தொடர்கின்றது.

இந்நிலையில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்று வலுச்சேர்க்கும் வகையில் அனைத்து பல்கலைக் கழக மாணவர்கள் இன்றையதினம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலிமுகத்திடலுக்கு ஆர்ப்பாட்ட பேரணியை சற்றுமுன் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தினை தடுப்பதற்காக காலிமுகத்திடல் வீதிகளுக்கு பாதுகாப்பு தரப்பினால் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏராளமான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வீதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித்தடை காரணமாக குறித்த வீதியை பயன்படுத்துவோர் கடும் சிரமங்களுக்கு உட்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த வீதியால் பயணத்தை மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் வீதித்தடைகள் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *