அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலிமுகத்திடலுக்கு செல்லும் லோட்டஸ் வீதி பாதுகாப்பு தரப்பால் வீதித்தடை அமைக்கப்பட்டு முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வீதியால் நடந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதுகாப்பு கடமையில் ஏராளமான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் கண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



