கடுமையான வீதித்தடைகளுடன் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

கொழும்பு, ஏப் 24

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பமாகி காலிமுகத்திடல் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.

இந்நிலையில் காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதிகள் அனைத்தும் கடுமையான வீதித்தடைகள் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டள்ளது.

இந்நிலையில் இந்த வீதிகளை மறித்து வீதித்தடைகள் போடப்பட்டுள்ளமையால் அவ் வீதியுடனான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் வீதிவழியே நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *