கொழும்பு, ஏப் 24
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பமாகி காலிமுகத்திடல் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் முஜிபுர் ரஹ்மானும் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
