வவுனியா, ஹட்டனில் போராட்டங்கள் முன்னெடுப்பு

வவுனியா, ஏப் 24

அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை இளைஞர், யுவதிகள் என வவுனியா மற்றும் ஹட்டனில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா ஈஸ்வரிபுரம் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கட்டுப்பாட்டு விலையை கொண்டுவா, கோட்டா மகிந்த அரசே ஆட்சியை விட்டு வெளியேறு, போராடும் மக்களை சுட்டுக்கொல்லாதே, போன்ற பாதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பி ஆர்பாட்டத்தை முன்னேடுத்திருந்தனர் .

இதே நேரம் ஹட்டனிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “ஒன்றிணைந்த இளமை அட்டனில் தொடக்கம்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் அட்டன் பகுதியில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் உள்ள பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அடுத்த தலைமுறை வாழ வேண்டும், ரம்புக்கனை இளைஞனுக்கு நீதி வேண்டும், சிறார்களின் கல்வியை நாசம் செய்யாதே போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சி படுத்திய வண்ணம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

வவுனியா
ஹட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *