
இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைத்தாண்டல் ஓட்டப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்ற கௌசல்யா மதுஷானி காலமானார்.
சர்வதேச தடகளப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குளியாபிட்டி பகுதியைச் சேர்ந்த கௌசல்யா மதுஷானி, தவறான முடிவு எடுத்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.