பிரதமரின் வீட்டு சுவரில் அரசுக்கு எதிரான வாசகங்களை எழுதிய ஆர்ப்பாட்டக்கார்கள்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான விஜேராம இல்லத்தின் சுவரில் ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வாசகங்களை எழுதி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

‘கொலைக்கார கோட்டா வீட்டுக்குப் போ’, ‘அன்று ரதுபஸ்வல இன்று ரம்புக்கன’, ‘225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம்’ என்கிற வாசகங்களை போராட்டக்காரர்கள் சுவரில் எழுதியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *