பிரதமரின் இல்லம் முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்களால் பதற்றம் – தடையை உடைத்து முன்னேற முயற்சி!

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் காலிமுகத்திடலை சுற்றியுள்ள பகுதியில் இரும்பு வேலிகளை அமைத்து பொலிஸார் தடை விதித்திருந்த நிலையில் மாணவர்கள் பிரதமரின் விஜேராம வீட்டை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டுள்ள மாணவர்கள் அங்கிருக்கும் தடையை உடைத்து முன்னேற முயற்சி செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *