டோக்கியோ ஒலிம்பிக்கில் கொவிட் பாதிப்பை தவிர்க்க முடியாது: உலக சுகாதார அமைப்பு!

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கூறுகையில், ‘கொரோனா பாதிப்பு புள்ளிவிபரத்தின் மூலம், ஒலிம்பிக் தொடரில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. வைரஸ் பிரச்சினையை முற்றிலும் ஒழிப்பதென்பது முடியாத காரியம். விளையாட்டு வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும். இதன்மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம்.

ஆனால், உலகில் வழங்கப்பட்ட தடுப்பூசியில், 75 சதவீதத்தை, 10 நாடுகள் மட்டுமே பங்கு போட்டுக் கொண்டுள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டை விட அதிக பரவல் கொண்டதும், ஆபத்து நிறைந்ததுமான மற்றுமொரு மாறுபாட்டை மனிதகுலம் விரைவில் பார்க்கக்கூடும்’ என கூறினார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடர், நாளை ஆரம்பமாகி எதிர்வரும் ஒகஸ்ட் 8ஆம் திகதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *