பாதுகாப்பு அச்சுறுத்தல்: நியூஸி. தொடர்ந்து பாகிஸ்தானுடனான தொடரை இரத்து செய்தது இங்கிலாந்து!

ஒக்டோபரில் திட்டமிடப்பட்ட பாகிஸ்தான் ஆண்கள் மற்றும் பெண்கள் சுற்றுப்பயணத்திலிருந்து இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, நியூஸிலாந்தை தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்த போதிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது.

அதற்கு நன்றிக்கடனாக பாகிஸ்தான் சென்று கிரிக்கெட்டில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்திருந்தது.

இதன்படி அடுத்த மாதம் பாகிஸ்தான் சென்று இரண்டு ரி-20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, இந்த தொடரை தற்காலிகமாக இரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் அணியுடன் முதல் ஒருநாள் போட்டி நடைபெறுவதற்கு சற்றுமுன் நியூஸிலாந்து தொடரை இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *