முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள, சிலாபத்துறை புதுவெளி பகுதியிலுள்ள, முஸ்லிம் மையவாடி பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் அமைக்கப்படவுள்ளது.
இதன், ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு முசலி மஸ்ஜிதுத் தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், முசலி மஸ்ஜிதுத் தக்வா ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் காணியில் பாலர் பாடசாலை, பள்ளிவாசல், மையவாடி போன்றவை அமைந்துள்ளது.
எனினும், மையவாடிக்கு என ஒதுக்கப்பட்ட காணிக்குள் கரப்பந்தாட்ட மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையோடு, ஆரம்ப கட்ட பணிகள் இடம்பெற்று வருகின்றது.
இந்த மைதானம் அமைக்கும் நடவடிக்கைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதும், உரிய அதிகாரிகள் அதை பொருட்படுத்தாது உள்ளனர்.
எனவே, குறித்த மைதானம் மையவாடி பகுதியில் அமைக் கப்படுவதை நிறுத்தி வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும், இவ்விடயம் தொடர்பில் முசலி பிரதேச செயலாளரிடம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளேன் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் ஐ தெரிவித்தார்.