பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலை குறித்து விரைவில் இறுதி முடிவு

எதிர்வரும் நாட்களில் பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலை தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

விலை உயர்வை அனுமதித்தால் எந்தப் பற்றாக்குறையும் இல்லாமல் பொருட்களை வழங்க முடியுமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் கூறினார்.

உலக சந்தையில் விலை உயர்வு காரணமாக, பால்மா, கோதுமை மா மற்றும் சிமென்ட் நிறுவனங்கள் பலமுறை விலை உயர்வை கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கூறினார்.

இந்நிலையில் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு விலை உயர்வு கோருவதைத் தவிர்க்கவும், குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு போதுமான பங்குகளை இறக்குமதி செய்யவும் நிறுவனங்களை கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *