
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் நேற்று மாலை யாழை வந்தடைந்தார்.
இந்நிலையில் முதல் சந்திப்பாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியை சந்தித்த அமெரிக்க தூதர் அதன் பின்னர் யாழ் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மெற்கொண்டார்.
இன்றையதினம் காலை யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
இதேவேளை அமரிக்க தூதர் இன்றையதினம் யாழ் வணிகர் கழக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அதன்பின்னர் வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.