
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்பு போராட்டங்ககள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை எதிர்க்கட்சிகளால் பாராளுமன்ற அமர்வின் போதும் கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போதைய அரசாங்கம் தொடர்பில் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முரட்டு ஆட்சிக்கு இது திரைச்சீலை! ‘தேசத்தை திவாலாக்கியதற்காக’ மக்களால் நிராகரிக்கப்பட்ட மகிந்த SLPP பாராளுமன்ற உறுப்பினர்களால் தற்போது கைவிடப்பட்டுள்ளார். இனி ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் மகிந்தராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை. உடனடியாக ராஜினாமா செய்து இரத்தக்களரியை தவிர்க்கவும்!என அதில்குறிப்பிட்டுள்ளார்.