மேலும் 15 பேர் இந்தியாவில் தஞ்சம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 இலங்கையர்கள் இன்று தமிழகத்தின் தனுஷ்கோடி அருகிலுள்ள கோதண்டராமர்கோவில் பகுதியில் தஞ்சம் கோரினர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களிடம் இந்திய கடலோரபொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22 ஆம் திகதியில் இருந்து இன்று வரை 75 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *