கொழும்பில் கோட்டாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒரே மேடையில் சங்கமம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த பல வாரங்களாக அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

அதே நேரம் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தும் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்றையதினம் அரசாங்கத்திற்கு ஆதரவாக சில தரப்பிகரால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேநேரம் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்ணொருவர் கோட்டா கோ கோம் என்றவாறு சுலோகம் தாங்கிய அட்டையினை கையில் வைத்தவாறு அரசாங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *