பிரான்ஸில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இம்மனுவல் மக்ரோன் மீண்டும் வெற்றிபெற்று அதிபராகத் தேர்வாகியுள்ளார்.
இவர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வரும் நிலையில் அவரது பதவிக்காலம் நிறைவடைந்தமை அடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் மக்ரோன் உட்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளை பெற்றிராத நிலையில் இரண்டாம் நட்ட தேர்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதில் மக்ரோன் 58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக வெற்றிபெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென் 41.8 சதவீதம் குறைந்தளவு வாக்கு வித்தியாசயத்தில் தோல்வியடைந்துள்ளார்.
இரண்டாவது தடவையாக பிரான்ஸ் அதிபராக வெற்றிபெற்ற இம்மனுவேல் மக்ரோனுக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.