
தற்போதைய அரசாங்கம் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இல்லாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, அடுத்த வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தாம் உட்பட 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தெரிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

