பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றது.
இந்நிலையில் பிரதமரின் பதவி விலகல் தொடர்பில் பிரதமரின் இணைப்பு செயலாளர் ஜி. காசிலிங்கம் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
நான் இப்போது பிரதமருடன் இருக்கிறேன். இந்தச் செய்தியை நான் அவருக்குப் படித்தேன், அதற்கு அவருடைய பதில், “கம்மாபில வழக்கம் போல் பொய் சொல்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.


