மின் கட்டணத்தை செலுத்த முடியாத மின் பாவனையாளர்களுக்கு புதிய சலுகை..!

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக மின் கட்டணத்தை செலுத்த முடியாத மின் பாவனையாளர்களுக்கு 24 மாத சலுகை காலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று (21) செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் தெரிவித்தார்.

கொரோனா சூழ்நிலையால் அவர்கள் மின் கட்டணத்தை தவணைகளில் செலுத்த வேண்டும். அத்துடன் நிலுவையில் உள்ள மின் கட்டணங்களின் மாதாந்த தவணைக்கு சிறிய வட்டி வசூலிக்கப்படுமெனவும், வரும் நாட்களில் வசூலிக்கப்படும் வட்டி குறித்து நுகர்வோருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

எனினும் தற்போதைய சூழ்நிலையால் கடந்த இரண்டு மாதங்களில் இலங்கை மின்சாரசபைக்கு ரூ. 44 பில்லியன் செலுத்த வேண்டியிருந்தது என்றும், மின்சார கட்டணத்தை செலுத்தக்கூடிய மக்கள் கூட தங்கள் மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்தோடு ஜனாதிபதியின் கருத்தின்படி, 2030 க்குள் சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை 70 சதவிகிதம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது,என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *