மட்டக்களப்பிற்கு இரண்டு இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்வரும் இரு தினங்களில் இரண்டு இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரி அலுலகம் ஊடாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 28 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 7863 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 112 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6100பேர் குணமடைந்து வீடுசென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *