
கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காது வரவேண்டாம் என காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களது புகைப்படங்களை தாங்கியவாறு குறித்த பதாகை காலி மாவட்ட பொதுமக்கள் சார்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காலி மாவட்ட மக்களால் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடும் பதாகை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.