லண்டனில் கத்திக்குத்து சம்பவம்: 4 பேர் கொலை

லண்டன், ஏப் 26

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சவுத்வார்க் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அருகில் இருந்தவர்களால் பொலிஸாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார், அங்கு 4 பேர் கடுமையான கத்திக்குத்துக் காயங்களுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் இருந்ததாகவும், அந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் தொடர்புகொண்டு வருவதாகவும், அவர்களின் அடையாளங்களை வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான சந்தேக நபருக்கு கொலை செய்யப்பட்ட நால்வரையும் ஏற்கனவே தெரியும் என்று புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *