
கண்டி, ஏப் 26
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று(26) ஆரம்பமாகவுள்ளது.
‘ஐக்கிய மக்கள் பேரணி’ என்ற தொனிப்பொருளிலில் ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி, 5 நாட்கள் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதற்கமைய இன்றைய தினம் கண்டி – தலதா மாளிகையில் ஆரம்பமாகி 30 ஆம் திகதி கொழும்பில் நிறைவடையவுள்ளது.
அதற்கமைய 5 கட்டங்களின் அடிப்படையில் இந்த பேரணி இடம்பெறவுள்ளதுடன், 26 ஆம் திகதி கண்டியிலிருந்து மாவனெல்ல வரையும் , 27 ஆம் திகதி மாவனெல்லையிலிருந்து கலிகமுவ, 28 ஆம் திகதி கலிகமுவையிலிருந்து தனோவிட, 29 ஆம் திகதி தனோவிடவிலிருந்து யக்கல , 30 ஆம் திகதி யக்கலையிலிருந்து பேலியகொட வரையும் குறித்த பேரணி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.