மருந்துப் பொருட்களுடனான கப்பல் நாளை நாட்டை வந்தடையும்

கொழும்பு, ஏப் 26

இந்திய கடனுதவியின் கீழ் 101 வகையான மருந்துகள், மருத்துவ உபகரணங்களை ஏற்றிவரும் கப்பல் நாளை நாட்டை வந்தடையவுதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சன்ன ஜயசுமன கூறியதாவது,

மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு கடன் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சுமார் 100 நாட்கள் வரை செல்லும்.

அதுவரை இந்தியாவிலிருந்து கடன் வழங்குதலின் கீழ் மருந்து விநியோகம் தொடரும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *