
19ஆவது அரசியலமைப்பை திருத்தங்களுடன் அமுல்படுத்துவதற்கான பிரதமரின் முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
19ஆவது அரசியலமைப்பை தேவையான திருத்தங்கள் மற்றும் காலத்திற்கு ஏற்ற திருத்தங்களுடன் அமுல்படுத்துவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த முன்மொழிவிற்கு நேற்று (25) பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் கூடிய போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இம்முன்மொழிவு சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.