ராஜபக்ஷக்களுக்கு இடையில் கலந்துரையாடல்? – போராட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராய்வு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) இரவு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தக் கலந்துரையாடல் நேற்று நள்ளிரவு வரை நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *