இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்களின் 45வது சிரார்த்த தினம் மட்டக்களப்பு தந்தை செல்வா நினைவு முற்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பொன்.செல்வராசா அவர்களின் தலைமையில், மலர் மாலை அணிவித்து , தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி வணக்கம் செலுத்தப்பட்டது.
இதன்போது தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


