பயங்கரவாத தாக்குதல் குறித்த உண்மைகளையும் மறைக்க அரசாங்கம் விரும்பவில்லை – நாலக கொடஹேவா

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான எந்த உண்மைகளையும் மறைக்க அரசாங்கம் விரும்பவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அவர், உண்மைகளை மறைப்பதன் மூலம் தாம் நமையடைய போவதில்லை என கூறினார்.

இந்த விடயம் தொடர்பாக அண்மையில் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்த தற்போதைய அரசாங்கத்தின் ஒரே குறைபாடு தொடர்பாடல் இல்லாததுதான் என்றும் அமைச்சர் கூறினார்.

எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு உண்மைகளை உடனுக்கு உடன் வழங்குவோம் என நம்புவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *