
50 கிலோகிராம் நிறையுடைய ஒரு மூடை சீமெந்தின் விலை இன்று முதல் 400 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், சீமெந்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளமையினால், எதிர்வரும் 3 மாதங்களுக்கு சீமெந்தினை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு இலங்கை தேசிய கட்டுமான சங்கம் கோரியுள்ளது.
மணலின் விலையும் அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி குறிப்பிட்டார்.

