பெற்றோல், டீசலுடன் கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன!

நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) கொலன்னாவை களஞ்சியசாலையில் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இறக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

90,000 லீற்றர் மசகு எண்ணெயை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று (26) நாட்டை வந்தடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

டொலர்களை நிர்வகிப்பதன் மூலம் கப்பலுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி வழங்கப்படும் என CPC தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *