வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினரால் திருநாவுக்கரசு நாயனார் (அப்பர் சுவாமிகளின்) குருபூஜை தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது .
விஷேட பூஜை வழிபாடுகளின் பின்னர் இந்து இளைஞர் சங்கத்தின் பிரதான வாயிலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் தாகசாந்தியும் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள், பொது அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.




