5 பேரடங்கிய அமைச்சரவை உபகுழு நியமனம்

கொழும்பு, ஏப் 26

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீ.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்த்தன, அலி சப்ரி மற்றும் ரமேஸ் பத்திரன ஆகிய ஐந்து பேர் அடங்கிய அமைச்சரவை உபகுழு ஒன்று நேற்று அமைச்சரவையில் நியமிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் திருத்தத்தினை மேற்கொள்வது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்வரைபை ஆராய்வதற்காக குறித்த உபகுழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *