கோட்டாவின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைத்தால் நிராகரிப்போம்: ஜே.வி.பி

கொழும்பு, ஏப் 26

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு யோசனையையும் நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.

அத்தகைய பிரேரணைகளுக்கு ஜே.வி.பி ஒருபோதும் உடன்படாது என ஜே.வி.பியின் தலைவர் எம்.பி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென்பது பொதுமக்களின் பிரதான கோரிக்கை என தெரிவித்த எம்.பி., மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான போதிலும், ஜனாதிபதி ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார்.

நாட்டின் ஸ்திரத்தன்மை மேலும் சீர்குலைந்தாலும், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானாலும், ஆட்சி கவிழ்ந்தாலும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார்.

இந்த அரசாங்கத்தினால் முழு நாடும் பொதுமக்களும் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் தமது அதிகாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *