
அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாட்டில் கடந்த ஒரு மாதங்களாக பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இதேவேளை காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் கடந்த 17 நாட்களாக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்களால் குறித்த பகுதி கோட்டா கோ கோம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலை நேற்றையதினம் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்பாக அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் குறித்த பகுதி மைனா கோ கம என பெயரிடப்பட்டது.
இந்நிலையில் சற்றுமுன் மைனா கோ கம உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
மதத்தலைவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் இணைந்து நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.